×
Saravana Stores

சரக்கு ரயில் மீது மோதும் முன்பே தடம் புரண்டதா?: ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி தகவல்

சென்னை: சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதற்கு முன்பாகவே பாகமதி எக்ஸ்பிரஸ் லேசாக தடம் புரண்டிருக்கலாம் என ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் பதிவான சிக்னல் தரவுகள் அடிப்படையில் லேசாக தடம் புரண்டதன் காரணமாகவே பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனுக்குள் நுழைந்திருக்கலாம். கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் பிரதான வழித்தடத்தில் செல்லவே சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. மெயின் லைனில் பாகமதி எக்ஸ்பிரஸ் சென்றபோது பெரும் அதிர்வு ஏற்பட்டு லூப் லைனில் சென்றதாகவும், மெயின் லைனில் ரயில் நுழைந்த பிறகே சிக்னலை காட்டும் பாயின்ட் இண்டிகேசன் மறைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சரக்கு ரயில் மீது மோதும் முன்பே தடம் புரண்டதா?: ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Express ,Karappettai Railway Station ,Bhagamati ,Dinakaran ,
× RELATED சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி வேலை...