×

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல்

சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் செய்தி: ‘முரசொலி’ நாளிதழில் தன் எழுத்துக்களால் தாக்கத்தை ஏற்படுத்தியவரும், ‘சிலந்தி’ என்ற புனைப்பெயரில் முரசொலி நாளிதழில் பல கட்டுரைகளை எழுதியவரும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் போற்றிய அண்ணலும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய உறவுச்செம்மல் முரசொலி செல்வம் அவர்களின் மறைவு மாபெரும் துயரச் செய்தியாகும்.
அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அவரை இழந்து தவிக்கும் செல்வி அக்காவுக்கும், குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறையை சார்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. P. Saminathan ,Chennai ,Tamil ,Silanthi ,Muthamil ,Chief Minister ,M. K. Stalin ,MU Saminathan ,
× RELATED இயந்திரங்களின் பழுதை நீக்கி அமராவதி...