×

திருவாடானை அருகே சரக்கு வாகனம் மீது பஸ் மோதி 4 பேர் படுகாயம்

திருவாடானை, செப். 28: திருவாடானை அருகே சாலையோரம் நின்ற சரக்கு வாகனம் மீது தனியார் பஸ் மோதியதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் பகுதியில் காய்கறியுடன் சரக்கு வாகனம் நேற்று முன்தினம் இரவு சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இந்த வாகனம் மீது ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து தேவகோட்டை நோக்கி வேகமாக சென்ற தனியார் பஸ் மோதியது. இதில் சரக்கு வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவர் தேவகோட்டை இ.பி. ரோடு பகுதியைச் சேர்ந்த கோபால் (44), அவரது தாய் அன்னமயில் (61), தேவகோட்டை மாந்தோப்பு வீதியைச் சேர்ந்த மீனாள் (55) மற்றும் தேவகோட்டை கைலாசநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (51) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் இடிபாடுகளில் சிக்கிய கோபால் உட்பட 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாடானை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் 4 பேரும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

The post திருவாடானை அருகே சரக்கு வாகனம் மீது பஸ் மோதி 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Thiruvadan ,Periyakeeramangalam ,Dinakaran ,
× RELATED வீட்டிற்குள் புகுந்த பாம்பு