×

விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உதவி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நேற்று முன்தினம் மாலை விபத்தில் சிக்கிய வாலிபரை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார். அவருக்கு, அளிக்க உரிய சிகிச்சை டாக்டர்களுக்கு பரிந்துரை செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாலையில் காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் பகுதி, கருங்கேட் அருகே கார் வந்தது. அப்போது, அங்கு,, பைக்கில் வந்த 2 வாலிபர்களில் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்ததும், உடனடியாக காரை நிறுத்திய அமைச்சர், அந்த வாலிபரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். அங்கு அவருக்கு, உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் தெரிவித்தார். அவரது மனிதநேய செயலுக்கு பல்வேறு தரப்பு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்….

The post விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உதவி appeared first on Dinakaran.

Tags : Minister ,Th.Mo.Anparasan ,Kanchipuram ,T. Mo. Anparasan ,T.Mo.Anparasan ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதி...