×

பந்தலூரில் கிழக்கு ஒன்றிய பகுதியில் திமுக முப்பெரும் விழா: அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

பந்தலூர், செப்.26: பந்தலூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் திமுக முப்பெரும் விழா, பவளவிழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சூசம்பாடி, 9 மைல் கூவச்சோலை, கரியசோலை பந்தகாப்பு உள்ளிட்ட கிளை பகுதிகளில் திமுக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஸ் தலைமை வகித்தார், துணை செயலாளர் ஞானசேகர், மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன், சிவக்குமார், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஜெயந்தி,

மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மைமூனா, மாவட்ட மீனவர் அணி துணை தலைவர் ஜெயக்குமார், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சித்ரா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நெஜுமுதீன், ராஜன், நிர்வாகிகள் சிவமயம், சுரேஷ், முத்துசாமி, அருண்குமார், சின்னதுரை, ரவிக்குமார், தயானந்தன், சிவதாசன், மோகன்ராஜ், கமல்நாதன், சதானந்தன், சுப்பிரமணி, போட்டோ ரவி, சிவக்குமார், நடராஜ், ஜெய்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பந்தலூரில் கிழக்கு ஒன்றிய பகுதியில் திமுக முப்பெரும் விழா: அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ramachandran ,DMK ,Tripartite Festival ,Pandalur ,East ,Union ,Bandalur ,Bandalur East Union ,Triennial ,Pawalavizha ,Nilgiris district ,Pandalur East Union ,Susampadi ,Koovacholai ,Kariyacholai Bandhakappu ,
× RELATED திமுக ஆலோசனை கூட்டம்