×

ஆலையில் பயங்கர தீ ரூ.1 கோடி பட்டாசு நாசம்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி – சாத்தூர் ரோட்டில் உள்ள தனியார் லாரி டிரான்ஸ்போர்டில் இருந்து சிவகாசி பட்டாசுகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. நேற்று மாலை ஆலையில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டாசு பண்டல்களை இறக்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பட்டாசு பண்டலில் தீப்பிடித்து, மளமளமென பரவி பயங்கரமாக வெடிக்க தொடங்கின. பட்டாசு வெடிக்கும் சத்தம் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டது. தீயணைப்பு வீரரக்ள் விரைந்து வந்து 2 மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பட்டாசு பண்டல்கள் எரிந்து நாசமானது.

The post ஆலையில் பயங்கர தீ ரூ.1 கோடி பட்டாசு நாசம் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Tamil Nadu ,Sivakasi – Chatur road, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED லாரி டிரான்ஸ்போர்ட்டில்...