×

பட்டிவீரன்பட்டியில் பேரூராட்சி கூட்டம்

பட்டிவீரன்பட்டி, செப். 25: பட்டிவீரன்பட்டியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. மன்ற தலைவர் சியாமளா தலைமை வகித்தார். துணை தலைவர் கல்பனாதேவி அருண்குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்றார். இக்கூட்டத்தில் கருணாநிதி ஓடையில் பொது நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், ராமகிருஷ்ணபுரத்தில் அயோத்தி தாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.11.5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளநிலை உதவியாளர் மோகனபிரியா நன்றி கூறினார்.

The post பட்டிவீரன்பட்டியில் பேரூராட்சி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti ,Council President ,Syamala ,Vice President ,Kalpanadevi Arunkumar ,Executive Officer ,Gopinath ,Karunanidhi river ,Dinakaran ,
× RELATED வரத்து குறைவு.. தேவை அதிகரிப்பால்… தினந்தோறும் எகிறும் தேங்காய் விலை