×

நிலக்கடலை அறுவடை தீவிரம்

அரூர், செப்.25: மொரப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிலக்கடலை அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 மாதத்திற்கு முன் பயிரிடப்பட்ட நிலக்கடலை, தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் பருவமழை, கோடைமழை எதுவும் சரியாக பெய்யாததால், நிலக்கடலை விளைச்சல் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் ஏக்கருக்கு 10 மூட்டை கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

The post நிலக்கடலை அறுவடை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Aroor ,Morapur ,Dinakaran ,
× RELATED தூய்மை பணிகள் மும்முரம்