×

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

திருச்சி, செப்.25: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (செப்.27) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (செப்.27) வௌ்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை தொடர்பான கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நோிலோ, மனுக்கள் மூலமாகவோ தொிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

The post மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,District Collector ,Pradeep Kumar ,Farmers Grievance Day ,Trichy District ,Collector ,Trichy District Collector's Office ,District Collector's Office ,Dinakaran ,
× RELATED வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி:...