×

வரன்முறை செய்யாத மனைகளுக்கு குடிநீர் இணைப்பு மாநகராட்சி மேயர் அறிவிப்பு

கோவை,செப். 21: கோவை மாநகராட்சியில் வரன்முறை செய்யாத மனைகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பல ஆண்டுகளாக மாமன்ற உறுப்பினர் முறையிட்டு கொண்டிருந்தனர். ஆனால், இது குறித்த எவ்வித தீர்வும் எட்டாத நிலையில் தற்போது புதிதாக மேயர் பதவி ஏற்ற ரங்கநாயகி ராமச்சந்திரன் கமிஷனருடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவொன்றை வெளியிட செய்துள்ளார். அதில், வரன்முறை செய்யப்படாத மனைகளில் உள்ள வீடுகளுக்கு அபிவிருத்தி கட்டணம் செலுத்தி உடனடியாக குடிநீர் இணைப்பை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வரன்முறை செய்யாத மனைகளுக்கு குடிநீர் இணைப்பு மாநகராட்சி மேயர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Municipal Corporation ,Coimbatore ,Coimbatore Corporation ,Parliament ,
× RELATED பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி