×

பச்சிளம் குழந்தை திடீர் சாவு

அன்னூர், செப். 21: கோவில்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வருபவர் ராஜேஷ் (34). இவரது மனைவி மகா வித்யா. இவர் கோட்டையம்பாளையத்தில் மொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த 19ம் தேதி இரவு இவரது குழந்தை ஆதித்யா (2) பால் குடித்துவிட்டு தூங்கி விட்டது. நேற்று அதிகாலை குழந்தையை பெற்றோர் பார்த்தபோது குழந்தையிடம் வாந்தி வாடை அடித்தது.

இதனால்,குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை எதனால் இறந்தது என்பதை தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பச்சிளம் குழந்தை திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Rajesh ,Kovilpalayam Mariamman Kovil Road ,Maha Vidya ,Kotdayambalayam ,Aditya ,
× RELATED சிறப்பாக செயல்படும் அரசு பள்ளிகள்: ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டு