×

உதவி பேராசிரியர்கள் பணிக்கான மாநில தகுதித்தேர்வை உடனே நடத்த அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கடந்த ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் நடத்தப்படுவதாக இருந்து, தொழில்நுட்பக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட மாநிலத் தகுதித் தேர்வுகளை மீண்டும் நடத்துவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. தமிழ்நாட்டில் கடந்த 2018ம் ஆண்டுதான் கடைசியாக கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தால் உதவிப் பேராசிரியர் பணிக்கான தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.

அதன்பின் கடந்த 5 ஆண்டுகளாக தகுதித்தேர்வே நடத்தப்படவில்லை. எனவே, மாநிலத் தகுதித் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியிட்டு, அடுத்த மாதத் தொடக்கத்தில் முடிவுகளை அறிவிக்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து அக்டோபர் மாத இறுதிக்குள் உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை நடத்தி, நவம்பர் மாதத்தில் முடிவுகளை அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உதவி பேராசிரியர்கள் பணிக்கான மாநில தகுதித்தேர்வை உடனே நடத்த அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,CHENNAI ,BAMA ,President ,Nellai Manonmaniyam Sundaranar University ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல்,...