×

ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு

சென்னை: ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பொது இடங்களில்  மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனுப்பிய சுற்றறிக்கை: மக்கள் அதிக கூடும் இடங்களான வணிகவளாகங்கள், வியாபாரம் நடைபெறும் இடங்கள், பொதுஇடங்களில் மக்கள் மாஸ்க் அணியவில்லை. இந்நிலையில் அதிவேகமாக ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் கண்டிப்பாக முகக்சவசம், சமூக இடைவெளி, சானிடைசர் கொண்டு கை கழுவுதல், தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும். ஒமிக்ரான் அறிகுறிகள் மிகவும் லேசானவை ஒரு நபர் நோய் வாய்ப்பட்டிருப்பது தெரியாமல் கூட இருக்கலாம். அவர் இதுபோன்ற இடங்களுக்கு வரும் போது பிறருக்கு அது தெரியாமல் பரவுகிறது. ஒமிக்ரான் பரவுதலில் நெருங்கிய தொடர்புகள் மற்றும் மூடிய காற்றோட்டம் இல்லாத இடங்களில் பரவுவது ஆரம்ப தரவுகளில் தெளிவாக காட்டுகிறது. இதுவரை ஒமிக்ரான் உறுதிபடுத்திய நபர்கள், சந்தேக நபர்களுக்கு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே பாதுகாப்பை கைவிடவும் முடியாது. எனவே வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். யாரேனும் ஒருவர் சோதனைக்கு வந்தால் முடிவுகள் வரும் வரை  தனிமைப்படுத்த வேண்டும். மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு, தெருக்கள் ஆகியவற்றில் தற்ேபாது உள்ள கொரோனா மற்றும் ஒமிக்ரான் கண்டறியப்பட்டால் நெறிமுறைகளின்படி கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பிறகு கண்காணிக்கப்படுவர்களின் தனிமை படுத்தலை பின்பற்ற வேண்டும். இடைப்பட்ட காலம் மற்றும் 8 வது நாட்களில் அறிகுறிகள் தென்பட்டால் ஆர்டிபிசிஆர் சோதனைகள் செய்ய வேண்டும். பயண வரலாறு இல்லாதவர்கள், அதே நேரத்தில் அறிகுறிகள் கொண்டவர்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வரும் பட்சத்தில் நோய் தொற்றின் மூலத்தை கண்டறிய பரிசோதனை செய்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்….

The post ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Radakrishnan ,District Collectors ,Radhakrishnan ,
× RELATED தலைமைச்செயலர் தலைமையில் நடந்த மாவட்ட...