×

தமிழகத்தில் 17 ஆர்டிஓக்கள் பணியிடமாற்றம்: போக்குவரத்து கமிஷனர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த 17 ஆர்டிஓக்களை பணியிடமாற்றம் செய்து போக்குவரத்துத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர் நடராஜன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: (ஆர்டிஓக்களின் தற்போதைய பணியிடம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது) சந்திரசேகர்- சேலம் தெற்கு (நாகர்கோவில்); சுதாகர்- கடலூர் (தாம்பரம்) ; பிரதீபா- வேலூர் (ஈரோடு வடக்கு); வெங்கடகிருஷ்ணன்- திருச்சி மேற்கு (நாகப்பட்டினம்); ஜெயகவுரி- பழனி (சேலம் கிழக்கு); மூக்கண்ணன்- தாம்பரம் (கும்பகோணம்); பழனிசாமி-நாகப்பட்டினம் (பெரம்பலூர்); அறிவழகன் சேலம் (தஞ்சாவூர்); சசி-நாகர்கோவில் (ஸ்ரீபெரும்புதூர்); சரவணன்- ஆரணி (சேலம்); மூக்கன்- சிவகங்கை (சிவகாசி); கல்யாணகுமார்-சேலம் (சிவகங்கை); வெங்கடரமணி- ஈரோடு கிழக்கு (திருப்பூர் தெற்கு); தர்மாநந்தன்-கரூர் (தேனி); முருகன்-தஞ்சாவூர் (ஸ்ரீவில்லிபுத்தூர்); ஆனந்த்- திருப்பூர் தெற்கு (கரூர்); பாஸ்கரன்- விருதுநகர் (கோவை)க்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post தமிழகத்தில் 17 ஆர்டிஓக்கள் பணியிடமாற்றம்: போக்குவரத்து கமிஷனர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...