×

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, காஞ்சிபுரம், சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் மீட்பு பணிகள் மற்றும் எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், துறை செயலாளர்கள், உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். அப்போது, சென்னை மாநகராட்சி, ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் கேட்டறிந்தார்.

சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் மண்டல அளவிலான பல்துறை ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டங்களை நடத்த வேண்டும், சென்னை வடிநில பகுதியில் நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் ஆகிய துறைகளின் மூலம் நடந்து வரும் பணிகளின் தரம் முன்னேற்றம் குறித்து, மாவட்ட மற்றும் மண்டல கண்காணிப்பாளர்களை கொண்டு கள ஆய்வு செய்ய வேண்டும். இந்த பகுதிகளில் நடந்து வரும் பேரிடர் தணிப்பு பணிகள் அனைத்தும் 15.10.2024க்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், பருவ மழை தொடங்கும் முன்னரே மாநிலத்தின் அதிக பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதிகளில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை தலைமைச் செயலாளர் பிறப்பித்தார்.

The post சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Monsoon ,Chennai ,Tiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Chennai Chief Secretariat ,Avadi ,Tambaram Corporation ,Thiruvallur ,Northeast Monsoon ,
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...