×

காத்து வாக்குல இரண்டு காதல்… கழுத்தை நெரித்து கள்ளக்காதலி கொலை போலீசுக்கு பயந்து காதலன் தற்கொலை: திருவாரூர் அருகே பரபரப்பு

முத்துப்பேட்டை: காதலி வேறு ஒருவருடன் பழகியதால் ஆத்திரத்தில் கள்ளக்காதலியை கொன்று காதலன் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை மேலக்காடு கிராமத்தின் ஒதுக்கு புறமான காட்டு பகுதியில் நேற்று முன்தினம் 35வயது மதிக்கக்க வாலிபர் ஒருவர் உயரமான மரத்தில் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்த அப்பகுதி மக்கள், முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில்,இறந்தவர் அதேபகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் சந்திரசேகர் (35) என்பதும், கள்ளக்காதலியை கொன்று போலீசுக்கு பயந்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினத்தை சேர்ந்த விஜயக்குமார் மனைவி நீலாவதி (28). இவர் தனது கணவரை விட்டு பிரிந்து புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ராஜாதோப்பில் 2 ஆண்டுகளாக வாடகை வீட்டில் 7 வயது மகள் கனிசியுடன் வசித்து வந்தார்.

நீலாவதியின் கணவர் விஜயகுமாரின் உறவினரான சந்திரசேகர் அடிக்கடி நீலாவதி வீட்டிற்கு சென்ற போது அவர்களுக்கிடையே தகாத உறவு ஏற்பட்டது. கடந்த 2021ல் நீலாவதி தனது மகளுடன் சந்திரசேகர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது கரியாபட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதில் நீலாவதி மற்றும் அவரது மகளை மீட்ட போலீசார் நீலாவதியின் தாய் புஷ்பவள்ளியிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் நீலாவதி மீண்டும் சந்திரசேகருடன் சென்று மணமேல்குடியில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் தான் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபரான அருண்பாண்டியனுடனும் லீலாவதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்திரசேகருக்கும் , நீலாவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி காலை அருண் பாண்டியன், நீலாவதியின் மகள் கனிசியை, பொன்னகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இறக்கி விட்டு சென்றார். பின்னர் அன்று மதியம் பள்ளிக்கு சென்ற சந்திரசேகர், கனிசியின் சித்தப்பா என்றும், நீலாவதிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென கனிசியை அழைத்து சென்றார்.

மாலை வரை நீலாவதி வீட்டில் நடமாட்டம் இல்லை. சிறுமி கனிசியும் வீட்டில் காணவில்லை என்பதை அறிந்த அக்கம்பக்கத்தினர் நீலாவதி வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டிக்கிடந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது தலையில் ரத்த காயங்களுடன் கழுத்தில் சேலையால் இறுக்கப்பட்டு நீலாவதி இறந்து கிடந்தது தெரியவந்தது. பள்ளியில் இருந்து சிறுமி கனிசியை அழைத்து சென்று அவரது பாட்டி வீட்டில் சந்திரசேகர் விட்டு சென்றுள்ளார். இதனால் போலீசார் அவரை தேடினர். இதையறிந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக அருண்பாண்டியனிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

* கணவரை விட்டுவிட்டு கடந்த 2021ல் நீலாவதி தனது மகளுடன் சந்திரசேகர் வீட்டில் வசித்து வந்துள்ளார் லீலாவதிக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபரான அருண் பாண்டியனுடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

The post காத்து வாக்குல இரண்டு காதல்… கழுத்தை நெரித்து கள்ளக்காதலி கொலை போலீசுக்கு பயந்து காதலன் தற்கொலை: திருவாரூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Muthuppet ,Jambuwanodai Melakkadu ,Muthuppet, Thiruvarur district ,
× RELATED முத்துப்பேட்டை அடுத்த குன்னலூரில்...