×

வத்திராயிருப்பு பகுதியில் களம் வசதி ஏற்படுத்த கோரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி, நெடுங்குளம், பிளவக்கல் அணை மகாராஜபுரம், சேதுநாராயணபுரம், புதுப்பட்டி, மாத்துார், ரெங்கபாளையம், சுந்தரபாண்டியம், கோட்டையூர், இலந்தைக்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நெல் பிரதான விவசாயமாக  இருந்து வருகிறது. நெற்கதிர்கள் பல்வேறு பகுதிகளில் அறுவடையாகி வரும் நிலையில் நெற்களங்கள் இல்லாமல் இருந்து வருவதால் வத்திராயிருப்பில் கிருஷ்ணன்கோயில் செல்லும் சாலையில் நெல்லை குவித்து மூட்டைகள் தைத்கப்படுகின்றன. இதேபோன்று வத்திராயிருப்பில் மேலப்பாளையம் உள்ளிட்ட தெருக்களிலும் நெல்லை குவித்து மூட்டைகள் தைக்கப்படுகின்றன. இதே நிலை பல்வேறு இடங்களில், சாலைகளை நெற்களங்களாக விவசாயிகள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சாலையில் நெல்லை குவிப்பதால் சாலையில் செல்லக்கூடிய வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே களம் வசதி ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post வத்திராயிருப்பு பகுதியில் களம் வசதி ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vathirairipu ,Kanchapuram ,Coomapatti ,Nedungulam ,Plavakal Dam ,Maharajapuram ,Sethunarayanapuram ,Pudupatti ,Mathur ,Rengapalayam ,Sundarapandyam ,
× RELATED வ.புதுப்பட்டியில் தீ தடுப்பு சிறப்பு பயிற்சி