×

342 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆப்சென்ட்

 

தேனி, செப். 11:தேனி மாவட்டத்தில் டிட்டோ ஜாக் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் 622 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் ஆரம்பப்பள்ளிகள் உள்ளன. இதில் மொத்தமுள்ள 2882 பணியிடங்களில் 88 ஆசிரியர்கள் ஏற்கனவே, பல்வேறு காரணங்களால் விடுப்பு எடுத்திருந்த நிலையில் பள்ளிக்கு வரவில்லை. இப்போராட்டத்திற்கு ஆதரவாக 342 பேர் மட்டும் பள்ளிக்கு வராமல் ஆப்சென்டாகினர். இதனால் பள்ளிகள் வழக்கம்போல நடந்தது. இதனால் பள்ளி நடவடிக்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

The post 342 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Tags : Theni ,Ditto Jack ,Dinakaran ,
× RELATED கோரிக்கை வலியுறுத்தி டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் போராட்டம்