×

கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம் காவல்நிலையம் முன் தீக்குளித்த சென்னை டாக்ஸி டிரைவர் மரணம்

அலங்காநல்லூர்: கள்ளக்காதலருடன் மனைவி ஓடிய விரக்தியில் காவல் நிலையம் முன் தீக்குளித்த சென்னை கால்டாக்ஸி டிரைவர் பரிதாபமாக இறந்தார். மதுரை மாவட்டம், பாலமேடு காவல் நிலையம் அருகே வாடிப்பட்டி மெயின் ரோடு பகுதியில் வசிப்பவர் பொன்வேந்தன் (35). சென்னையில் கால் டாக்ஸி ஓட்டி வந்தார். மனைவி முத்துபிரியா (30). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். முத்துபிரியா பாலமேட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த நிலையில் வேறொருவருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

கடந்த 8ம் தேதி 3 மகன்களையும், காதல் கணவரையும் விட்டு விட்டு தொடர்பில் இருந்தவருடன் சென்று விட்டார். இதனால் மனஉளைச்சலுக்குள்ளான பொன்வேந்தன் நேற்று முன்தினம் மாலை பாலமேடு காவல் நிலையம் முன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதை கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்து உடனே 70 சதவீத தீக்காயங்களுடன் இருந்த அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பொன்வேந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

The post கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம் காவல்நிலையம் முன் தீக்குளித்த சென்னை டாக்ஸி டிரைவர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Otam police station ,Alankanallur ,Ponventhan ,Vadipatti Main Road ,Palamedu Police Station, Madurai District ,
× RELATED கள்ளக்காதலனுடன் மனைவி எஸ்கேப்: சென்னை டிரைவர் தற்கொலை