×

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

செய்யாறு, செப்.6: செய்யாறு அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜி மனைவி தனபாக்கியம்(80). இவர் நேற்று முன்தினம் வீட்டின் முன் பகுதியில் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள எர்த் ஒயரை எதிர்பாராமல் மிதித்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்ததில் தனபாக்கியம் தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மூதாட்டி தனபாக்கியம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சடலம், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தனபாக்கியத்தின் மகன் ரவிச்சந்திரன் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தனபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Seiyaru ,Raji ,Thanapakhyam ,Chengadu village ,earth ,
× RELATED செய்யாறு அருகே சிறுமி உயிரிழந்ததற்கு...