×

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜி மனு வாபஸ்:ஐகோர்ட் அனுமதி

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை திரும்ப பெறுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு
வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் மா.கவுதமன் ஆஜராகி, சாட்சிகளின் விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிவிட்டதால் இந்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜி மனு வாபஸ்:ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Enforcement Department ,CHENNAI ,Madras High Court ,minister ,Enforcement Directorate ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர...