×

தர்மபுரி அருகே டூவீலர் மீது கார் மோதி தொழிலாளி பலி

தர்மபுரி, செப்.4: போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை(52), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் டூவீலரில் தர்மபுரி அருகே உள்ள செம்மணஹள்ளி பகுதியில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். அப்போது அரூர் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கார், அண்ணாமலையின் டூவீலர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அண்ணாமலை வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தர்மபுரி அருகே டூவீலர் மீது கார் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Laborer ,Dharmapuri ,Annamalai ,Vadamangalam ,Bochampalli ,Semmanahalli ,Dinakaran ,
× RELATED ஆந்திராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!!