×

வட மாநில தொழிலாளி பலி

வபரமத்திவேலூர், செப்.4: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தை அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகையில் பீகார் மாநிலம் திகிரி தானே பகுதியைச் சேர்ந்த நந்திலால் மாஞ்சி(17) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை கபிலர்மலை வாரச்சந்தைக்கு சென்று காய்கறி வாங்கியுள்ளார். பின்னர், அங்கிருந்து ஜேடர்பாளையம் நோக்கிச் சென்ற சரக்கு ஆட்டோவில் பயணித்துள்ளார். வழியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய சரக்கு ஆட்டோ, சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த நந்திலால் மாஞ்சியை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வட மாநில தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : North State ,Vabaramathivelur ,Nandilal Manchi ,Thigiri Thane ,Bihar ,Ayyampalayam ,Jaderpalayam ,Namakkal district ,Kapilarmalai ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்