×

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஐடிஐ மாணவி கூட்டு பலாத்காரம்: காதலன் உள்பட 5 பேர் மீது எஸ்பியிடம் புகார்

சமயபுரம்: திருச்சி அருகே ஐடிஐ மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த காதலன் உள்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மாணவி அவரது தாயுடன் சென்று நேற்று புகார் மனு அளித்தார். திருச்சி மாவட்டம் சமயபுரத்தை சேர்ந்த 18 வயதான மாணவி. புள்ளம்பாடி விடுதியில் தங்கி தனியார் ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வருகிறார். சமயபுரத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (30). கூலித்தொழிலாளியான இவர், மாணவியை காதலித்து வந்தார். இந்நிலையில் விடுமுறை நாட்களில் வீட்டிற்கு மாணவி வருவது வழக்கம். அதேபோல் கடந்த ஏப்ரல் 13ம் தேதி விடுமுறைக்கு வந்தபோது சிலம்பரசன், மாணவியை தனது நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிலம்பரசன், மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மயக்கமடைய செய்துள்ளார். பின்னர் சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மது அருந்தி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியை நிர்வாணமாகவும் வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர்.

அந்த வீடியோவை காண்பித்து யாரிடமும் செல்லக்கூடாது. மீறி சொன்னால் இணையதளத்தில் வெளியிடுவேன் என காதலன் சிலம்பரசன் மிரட்டியுள்ளார். இந்நிலையில் மாணவியின் உடலில் மாற்றம் தெரிந்ததால் கடந்த மாதம் 31ம்தேதி அவரது தாயார் விசாரித்தபோது, மாணவி நடந்த விஷயத்தை தாயிடம் கூறியுள்ளார். 3 மாதம் கர்ப்பமாக இருந்ததால், சிலம்பரசன் கருகலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்து விட்டார் எனவும் தெரிவித்துள்ளார். இதுபற்றி தெரிந்த மாணவியின் உறவினர்கள் சிலம்பரசனை கண்டித்தபோது, அவர்களிடமும் வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக மாணவி மற்றும் தாயார் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாரை நேற்று மாலை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில், தன் மகளுக்கு நடந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும். 5 நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென என தெரிவித்துள்ளார்.

 

The post குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஐடிஐ மாணவி கூட்டு பலாத்காரம்: காதலன் உள்பட 5 பேர் மீது எஸ்பியிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : ITI ,SP ,Samayapuram ,Trichy ,Samayapuram, Trichy district ,
× RELATED லால்குடி அருகே ஐடிஐ மாணவிக்கு மயக்க...