- சௌர்ணா பிரியா
- சஸ்பெண்டுட்டனா
- திருக்கோவிலூர் தாலுகா
- கல்லுக்குறிச்சி மாவட்டம்
- தஞ்சாவூர் மாவட்டம்
- கணிபுரம்
- அமிர்தம் நகர்
வேளச்சேரி: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் தாலுகா, சந்தப்பேட்டையை சேர்ந்தவர் சொர்ண பிரியா (23). தஞ்சாவூர் மாவட்டம், காந்திபுரம், அமிர்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் ஜோஷி (30). கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதை அடுத்து நீலாங்கரை, செங்கேணி அம்மன் கோயில் பகுதியில் உள்ள அருண் ஜோஷி வீட்டில் இவர்கள் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில், இன்ஸ்டாகிராம் மூலமாக அருண் ஜோஷிக்கு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அப்பழக்கம் கள்ள தொடர்பாக மாறியது. மேலும், இவர் ‘கால் பாய்’ என்கிற வகையில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில், தனது பெற்றோருடன் சேர்ந்து, சொர்ண பிரியாவையும் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி, அடித்து, உதைத்து துன்புறுத்தியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சொர்ண பிரியா இதுகுறித்து, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 21ம் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அருண் ஜோஷை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், கால் பாயாக செயல்பட்டதும், காதல் மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை செய்த மகளிர் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….
The post பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி தாக்கிய காதல் கணவனை போலீசில் ஒப்படைத்த மனைவி appeared first on Dinakaran.