×

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, காங்., எம்எல்ஏக்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி, செப். 4: மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் அண்ணா சாலையில் இருந்து தலைமை செயலகத்தை நோக்கி நேரு வீதி வழியாக பேரணியாக வந்தனர். அவர்களை நேரு வீதி-கேண்டீன் வீதி வழியாக போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், அவர்கள் தடுப்பை மீறி சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள், எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் மற்றும் பலர் மீது பிஎன்எஸ்எஸ் 170 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, காங்., எம்எல்ஏக்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Imuka, Kang ,Puducherry ,General Secretariat ,India ,Dimuka ,Congress ,Anna ,Dimuka, Kang. ,Dinakaran ,
× RELATED பெங்களூரு, நாமக்கல் அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது