×

கேபிள் செலவு: தனியார் மின் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: வீடு, நிலங்களின் மேல் செல்லும் உயர் மின் அழுத்த கேபிள்களை மாற்றியமைக்கும் செலவை தனி நபர்களை ஏற்க வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டை சேர்ந்த சங்கர், ஜெயலட்சுமி தொடர்ந்த வழக்கில் தனியார் மின் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தங்கள் நிலம் மீது செல்லும் கேபிள்களை மாற்றியமைக்க ரூ.81 லட்சம் கேட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தனி நபர், அவர்களின் வீடு, நிலங்கள் பாதிக்காத வகையில் உயர் மின் அழுத்த கோபுரம், கேபிள் அமைக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

The post கேபிள் செலவு: தனியார் மின் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Madras High Court ,Shankar ,Chengalpattu ,Jayalakshmi ,ICourt ,Dinakaran ,
× RELATED மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக...