×

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம்

 

காரியாபட்டி, செப்.3: டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயமடைந்தார். எஸ்.பி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் முருகன்(38). இவர் காரியாபட்டியில் இருந்து டூவீலரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராம்பூர் என்ற இடத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kariyapatti ,Sakthivel ,Murugan ,S.P. Putur village ,Rampur ,
× RELATED குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் மறியல்