×

வருசநாடு அருகே பொது மயானத்திற்கு அடிப்படை வசதிகள்: கிராமமக்கள் கோரிக்கை

 

வருசநாடு, செப். 2: தேனி மாவட்டம், வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்துக்காடு கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராம பொது மயானத்தில் எரியூட்டும் கொட்டகை, சுற்றுசுவர், ஈமகிரி செய்ய தண்ணீர் வசதி , சாலை வசதி, காத்திருப்போர் அறை, தெருவிளக்கு போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

இதனால் இறந்தவர்களின் சடலங்களை எரியூட்ட வரும் உறவினர்கள் கடும் சிரமமடைகின்றனர். இது குறித்து கிராமவாசிகள் கூறுகையில், ‘‘பல ஆண்டுகளாக சுடுகாட்டில் அடிப்படை வசதிசெய்து தரப்படாமல் உள்ளது. இது குறித்து பல முறை கிராமசபைக் கூட்டங்களிலும் பொதுமக்கள் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post வருசநாடு அருகே பொது மயானத்திற்கு அடிப்படை வசதிகள்: கிராமமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Athukkadu ,Thangammalpuram panchayat ,Varusanadu, Theni district ,Emagiri ,Dinakaran ,
× RELATED கண்டமனூர் அருகே கிணற்றில் கிடந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது