×

தஞ்சாவூரில் இருந்து ரேஷன் கடைகளுக்கு விருதுநகர், கன்னியாகுமரிக்கு 1250 டன் அரிசி அனுப்பி வைப்பு

 

தஞ்சாவூர், செப்.2: தஞ்சாவூரில் இருந்து விருதுநகர் மற்றும் கன்னியாகுமரிக்கு சரக்கு ரயிலில் 1250 டன் அரிசி பொதுவிநியோகத் திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள், சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2500 டன் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் தலா 21 வேகன்களில் தலா 1250 டன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு பொதுவிநியோகத் திட்டத்திற்காக விருதுநகர் மற்றும் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

The post தஞ்சாவூரில் இருந்து ரேஷன் கடைகளுக்கு விருதுநகர், கன்னியாகுமரிக்கு 1250 டன் அரிசி அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Virudhunagar ,Kanyakumari ,Thanjavur district ,Tamil Nadu ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா...