×

போடி அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு

 

போடி, செப். 1: போடி அருகே சங்கராபுரம் தெற்கு காலனியை சேர்ந்தவர் வடிவேல் மனைவி மஞ்சுளா (31). சங்கராபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுருளியப்பன் மனைவி இந்திராணி (58). இருவரும் மகளிர் குழு மூலம் கடன் வாங்கியுள்ளனர். கடன் தவணை தொகையை செலுத்த தாமதமானதால் இவருக்கும் தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது.

சுருளியப்பன், இவரது மகன் மூர்த்தி, மூர்த்தியின் மனைவி இந்திராணி, உறவினர் உமா மற்றும் மஞ்சுளா, அவரது உறவினர்கள் கணேசன், சந்திரன், வனிதா, ஜீவிதா ஆகியோர் உருட்டு கட்டைகளால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் இருதரப்பை சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து இந்திராணி, மஞ்சுளா ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போடி அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Vadivel ,Manjula ,Shankarapuram South Colony ,Suruliyappan ,Indrani ,Shankarapuram East Street ,
× RELATED போடி பஸ் ஸ்டாண்டில் பூட்டிய கடைகளில் சிசிடிவி கேமராக்கள் திருட்டு