×

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி

தர்மபுரி, செப்.1: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வாழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமன்(29). இவர் ராஜஸ்தானில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கனகவள்ளி(24). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஹர்சத்(3), நேற்று முன்தினம் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அருகில் இருந்த தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து விட்டான். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், கிணற்றில் குதித்து குழந்தையை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்ைதயை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Hanuman ,Valathottam ,Palakod ,Dharmapuri district ,Rajasthan ,Kanagavalli ,Harsad ,
× RELATED அனுமனின் வாலுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வழிபடுவதேன்?