×

பட்டியலின மக்களுக்கு சிறப்பு நிதி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு: ஒன்றிய மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக வழங்க உத்தரவிடக் கோரி வழக்கில் ஒன்றிய மாநில அரசுகள் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதி கிடைக்காமல் மாணவர்கள் கல்வி, வீடு கட்டுபவர்கள், தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராஜகுரு என்பவர் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

The post பட்டியலின மக்களுக்கு சிறப்பு நிதி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு: ஒன்றிய மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Union State Governments ,Chennai ,Madras High Court ,Tamil Nadu ,IC Court ,Dinakaran ,
× RELATED தனியார் பள்ளிக்கான புதிய சட்டத்துக்கு எதிராக மனு