×

குரூப் 2 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது TNPSC

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, மொத்தம் 105 பணியிடங்களை நிரப்புவதற்காக நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது TNPSC.

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் இப்பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உள்ளவர்கள் செப்டம்பர் 28ம் தேதிக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2 தாள்கள் கொண்ட தேர்வாக நடைபெறும் இத்தேர்வில் தாள் ஒன்றில், தமிழ் தகுதி தேர்வு மற்றும் திறனறிவு தேர்வு வரும் நவம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தற்போது தொடங்கியுள்ளது. இந்த தேர்வுக்கு செப்டம்பர் 28-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குரூப் 2 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது TNPSC appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Tamil Nadu Public Service Commission ,Dinakaran ,
× RELATED இந்து அறநிலைய உதவி ஆணையர் பதவி...