×

ஆட்டோ டிரைவர்கள் அடையாள உண்ணாவிரதம்

 

போடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் வெளி ஆட்டோக்கள் நகரில்அதிகளவு இடை யூறுகள் ஏற்படுத்துவதால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க சின்னமனூர் பதிவு ஆட்டோ உரி மையாளர்கள் சங்கத்தின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். காலை 9 மணிக்கு துவங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 6 மணி வரையில் தொடர்ந்து நடைபெற்றது. உண்ணாவிரதத்தின் முடிவில் கோரிக்கை புகார் மனுவை சின்னமனூர் போலீசில் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்தினர்.

The post ஆட்டோ டிரைவர்கள் அடையாள உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Chinnamanur Registration Auto Uri Centerers Association ,Markayankot Roundabout ,Chinnamanur ,Dinakaran ,
× RELATED சின்னமனூர் ஓட்டலில் 30 கிலோ அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்