×

வார இறுதி நாட்களையொட்டி விழுப்புரம் கோட்டம் சார்பில் 370 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விழுப்புரம், ஆக. 29: விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: நாளை, நாளை மறுதினம் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிகளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை 125 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுதினம் 165 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 290 சிறப்பு பேருந்துகளை இந்த வழிதடத்தில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ேவலூர், ஓசூர், புதுச்சேரி இசிஆர் மற்றும் திருவண்ணாமலைக்கு ஆற்காடு, ஆரணி மற்றும் காஞ்சிபுரம், வந்தவாசி வழியாகவும் கூடுதலாக 80 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 370 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்திடவும் பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வார இறுதி நாட்களையொட்டி விழுப்புரம் கோட்டம் சார்பில் 370 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Villupuram division ,Villupuram ,Villupuram Division Government Transport Corporation ,Kalambakkam ,Kallakurichi ,Cuddalore ,Chidambaram ,Vruthathachalam ,Thiruvannamalai ,Polur ,
× RELATED விழுப்புரம் கோட்டம் சார்பில் 740 சிறப்பு பேருந்துகள் இயக்கம்