×

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா: கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் வீதியுலா

ஏரல்: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில் கொடை விழா நேற்று நடந்தது. இதையொட்டி கற்பக பொன்சப்பரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூரில் உள்ள பிரசித்திப் பெற்ற முத்துமாலை அம்மன் கோயிலில் கொடை விழா, கடந்த 20ம்தேதி கால் நாட்டு வைபவத்துடன் தொடங்கியது. 25ம்தேதி இரவு அம்மன் மஞ்சள் காப்பு தரிசனம், வில்லிசை நிகழ்ச்சியும், நேற்றுமுன்தினம் அம்மன் மாக்காப்பு தரிசனம், வில்லிசை நிகழ்ச்சி நடந்தது.

சிகர நிகழ்ச்சயான கொடை விழா நேற்று நடந்தது. இதையொட்டி மதியம் 12 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை மற்றும் கயிறு சுற்றி ஆடுதல், இரவு 10 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், நள்ளிரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மத்தாப்பு, வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் மேளதாளங்களுடன் கற்பக பொன்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி நகர் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கொடை விழாவை முன்னிட்டு காலை, மதியம், இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (28ம்தேதி) காலை 8 மணிக்கு வெளியே உலா சென்ற அம்மன் கோயில் வந்து அமர்தல், 9 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிறுத்தொண்டநல்லூர் நான்கு பங்கு இந்துநாடார்கள் செய்து உள்ளனர்.

The post சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா: கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் வீதியுலா appeared first on Dinakaran.

Tags : Amman Temple Gift Ceremony ,Thirutondanallur ,Muthumalai ,Amman Vidiula ,Kadapaka Pon Chaparat ,Aral: Donation ceremony ,Muthumalai Amman Temple ,Thirudondanallur ,Kadapaga Ponshaparam ,Amman ,Aral ,Muthumalai Amman Temple Goda Ceremony: Amman Vidiula ,Kadaka Bon Chaparat ,
× RELATED வாழப்பாடி முருகன் கோயில் அருகே மலையேறிய சிறுமி தவறி விழுந்து படுகாயம்..!!