×

நிலக்கோட்டை அருகே மருமகன் உயிரிழந்த அதிர்ச்சியில் மாமியார் மாரடைப்பில் மரணம்

*கர்ப்பிணி மகளுக்கும் உடல்நலம் பாதிப்பு

நிலக்கோட்டை : திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார்(24). பாஸ்ட் புட் மாஸ்டர். இவர், 10 மாதங்களுக்கு முன் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை சேர்ந்த நாகம்மாள்(21) என்பவரை, காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். நாகம்மாள் கர்ப்பமடைந்ததை தொடர்ந்து, அவருக்கு கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது. பின்னர் நாகம்மாளை, பெற்றோர் அவர்களது ஊருக்கு அழைத்து சென்றனர்.

குழந்தை பிறக்க சில நாட்களே உள்ள நிலையில் மனைவியை பார்ப்பதற்காக, அருண்குமார் தினமும் இரவு வேலையை முடித்து விட்டு மாமனார் வீட்டிற்கு சென்று வந்தார். அதன்படி அவர் கடந்த 25ம் தேதி இரவு வேலையை முடித்து விட்டு சிலுக்குவார்பட்டிக்கு டூவீலரில் சென்றார். அப்போது அம்மையநாயக்கனூர் பள்ளிவாசல் எதிரே சாலையோரம் உடலில் படுகாயங்களுடன் அருண்குமார் இறந்து கிடந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விபத்தில் இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரித்து வந்தனர்.

நாகம்மாளின் தாயார் சின்னப்பொண்ணு (46), தனது மகள் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவரது கணவர் இறந்து விட்டாரே என்ற வேதனையில் இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சின்னப்பொண்ணுவும் உயிரிழந்தார். கணவர் இறந்த நிலையில், தாயாரும் உயிரிழந்ததால் மன உளைச்சலில் நாகம்மாள் சரிவர சாப்பிடவில்லை. இதனால் அவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அக்கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post நிலக்கோட்டை அருகே மருமகன் உயிரிழந்த அதிர்ச்சியில் மாமியார் மாரடைப்பில் மரணம் appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Arun Kumar ,Jaganathapuram ,Kodairod, Dindigul district ,Nagammal ,Silkuwarpatti ,
× RELATED மருமகன் உயிரிழந்த அதிர்ச்சியில் மாமியார் மாரடைப்பில் மரணம்