×

திண்டுக்கல்லில் கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஆக. 28: திண்டுக்கல் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட செயலாளர் பாலன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கண்ணன், சுப்பையா, சின்னப்பன், சக்திவேல், ராஜகோபால் முன்னிலை வகித்தனர். கவுரவ தலைவர் சந்திரமோகன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும்.

நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சட்டத்தில் உள்ளபடி மருத்துவ வசதி வழங்க வேண்டும். ஓய்வூதியம் மாதம் ரூ.2000 வழங்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் விபத்தில் மரணம் அடையும், ஊனமடையும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவி ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சிவராஜன் நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Construction workers union ,Dindigul ,Dindigul Labor Welfare Department ,AITUC Building Workers Union ,Union ,District ,Balan ,Kannan ,Subpaiah ,Chinnappan ,Sakthivel ,Rajagopal ,Dindigul construction workers union protest ,Dinakaran ,
× RELATED மாணவி பாலியல் புகாரில் உண்மையில்லை: திண்டுக்கல் போலீஸ் விளக்கம்