×

லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு 3 ஆண்டு சிறை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார். இவர் கடந்த 2008ல் கோழிப்பண்ணை அமைக்க வங்கி கடன் பெற, வேலங்குடி குரூப் விஏஓ காந்தியிடம் அடங்கல், பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார். இவற்றை வழங்க செந்தில்குமாரிடம் இருந்து ரூ.500 லஞ்சம் வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விஏஓ காந்தியை கைது செய்தனர்.

இந்த வழக்கை சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி விசாரித்து விஏஓ காந்திக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

The post லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : VAO ,Sivagangai ,Senthilkumar ,Mahipalanpatti ,Tirupattur ,Sivagangai district ,Velangudi Group ,VAO Gandhi ,
× RELATED சொத்தை எழுதி தர மறுத்ததால் ஆத்திரம்...