×

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர், படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்கள் விசைப்படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்களும் அவர்களது விசைப்படகும் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருவதை, ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன். 2024ம் ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினர் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதுடன், வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடலில் மீனவர்களை தாக்கிய சம்பவங்களை தங்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளேன். இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம். எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், படகுகளையும் விரைந்து விடுவிப்பதற்கு, உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

The post இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர், படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Chief Minister ,Union Minister ,Jaishankar ,Chennai ,M.K.Stalin ,Union External Affairs Minister ,Nagapattinam district ,Kodiakarai ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்...