×

மதுரவாயல் அருகே சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து விபத்து: 5 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்

பூந்தமல்லி: மதுரவாயல் அருகே சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரக்கோணத்தில் உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து துணிகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்று காலை பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. மதுரவாயல் அருகே வந்தபோது திடீரென சரக்கு வாகனத்தின் டயர் வெடித்ததில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து கிடந்த வாகனத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், காலையிலேயே வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் இதனால் கடும் அவதியுற்றனர். சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் திடீரென்று டயர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மதுரவாயல் அருகே சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து விபத்து: 5 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Poontamalli ,Arakkonam ,Dinakaran ,
× RELATED மதுரவாயல் அருகே பயங்கரம் தறிகெட்டு...