×

தூத்துக்குடியில் 30ம்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி, ஆக.23: மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 30ம்தேதி காலை 11.30 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இதில், பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்ப பெறுதல், புதிய இணைப்பு கோரியதன்நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்து தீர்வு காணலாம். எனவே, பொதுமக்கள் இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

The post தூத்துக்குடியில் 30ம்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,District Revenue Officer ,Ajay Srinivasan ,Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி சிதம்பரநகர் சாலையில் வரும் 29ல் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி