×

நாமக்கல் அருகே கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாமக்கல் அருகே கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம், சத்திநாயக்கன்பாளையம் கிராமம், குடித்தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் த/பெ.சண்முகம் என்பவர் கடந்த 27.07.2024 அன்று அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் சிறுமி தஸ்மிதா (வயது 10) த/பெ. பிரபு, திரு. தங்கராசு (வயது 50) த/பெ. பழனியப்பன் மற்றும் முத்துவேல் (வயது 35) த/பெ.ராஜீ ஆகிய மூவரையும் கத்தியால் வெட்டிய சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி தஸ்மிதா என்பவர் சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (22.08.2024) உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து சேலம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தங்கராசு மற்றும் முத்துவேல் ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி தஸ்மிதாவின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

The post நாமக்கல் அருகே கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Namakkal District Thiruchengodu Circle ,Chatinayakanpalayam Village ,Sentilkumar Ta/Pe. Sanmugham ,Mu K. Stalin ,Dinakaran ,
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...