×

சாட்சி விசாரணை தொடங்கியிருந்தாலும் வழக்கிலிருந்து விடுவிக்க கோர முடியும்: செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் விளக்கம்

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்தாண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்க துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு சாட்சி விசாரணை தொடங்கி விட்டதாக தெரிவித்தார்.

அப்போது, நீதிபதி, இந்த வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில் வழக்கிலிருந்து விடுவிக்க கோர முடியுமா? என்று கேட்டார். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கவுதமன், எந்த சூழலிலும் வழக்கிலிருந்து விடுவிக்க கோர முடியும் என்றார். மேலும், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகவுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றார். இதையடுத்து, விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், முதன்மை அமர்வு நீதிமன்றம் சாட்சி விசாரணையை தொடரலாம் என்று உத்தரவிட்டனர்.

The post சாட்சி விசாரணை தொடங்கியிருந்தாலும் வழக்கிலிருந்து விடுவிக்க கோர முடியும்: செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,CHENNAI ,Former minister ,
× RELATED செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர...