×

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை

பல்லாவரம்: குன்றத்தூர் மேத்தா நகர், மேற்கு தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (42). இவரது மனைவி கனிமொழி (40). குன்றத்தூரில், ராம்குமார் ஓட்டல் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் காரணமாக, மன உளைச்சலில் இருந்த வந்த இவர், நேற்று முன்தினம் இரவு தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த குன்றத்தூர் போலீசார், ராம்குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், ராம்குமார் கடந்த ஓராண்டிற்கு முன்பு, குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் புதிதாக ஓட்டல் தொடங்கினார். அதில், சரியாக வியாபாரம் ஆகாததால் அந்த ஓட்டலை மூடியுள்ளார். தற்போது நடத்தும் ஓட்டலிலும் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்தது தெரியவந்தது.

The post தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Ramkumar ,West Street ,Kunradathur Mehta Nagar ,Kanimozhi ,Kunradur ,Vada ,
× RELATED பல்லாவரம் பஸ் நிலையம் அருகே சாலையை...