×

பெரம்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டு: போலீசார் விசாரணை

பெரம்பூர்: பட்டாபிராம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.20 மணிக்கு மின்சார ரயில் சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்தது. பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையத்திற்கும், பெரம்பூர் ரயில் நிலையத்திற்கும் இடையே வந்தபோது, தண்டவாளத்தில் 6 மீட்டர் அளவுள்ள இரும்பு துண்டு இருப்பதை கண்ட ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.அதற்குள் ரயில், அந்த இரும்பு துண்டின் மீது ஏறி இறங்கியது. அப்போது, பலத்த சத்தம் கேட்டது. உடனடியாக ரயில் ஓட்டுனர் வண்டியை நிறுத்தி, இதுகுறித்து ரயில் நிலைய பொருப்பாளர் வருண்குமாருக்கு தகவல் கொடுத்துவிட்டு, மீண்டும் ரயிலை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

இதுகுறித்து பெரம்பூர் ரயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு வருண்குமார் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார், தண்டவாளத்தில் இரும்பு துண்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அதை பறிமுதல் செய்து, சரக்கு ரயில் செல்லும்போது அதிலிருந்து இரும்பு துண்டு தவறி விழுந்ததா அல்லது நாச வேலை காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பெரம்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Perambur railway station ,Perambur ,Pattabram railway station ,Perampur railway ,Dinakaran ,
× RELATED ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபருக்கு வலை