×

கோர்ட்டில் ஆஜராகாத வாலிபர் கைது

நெல்லை, ஆக.21: மானூரில் அடிதடி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் மானூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு அடிதடி வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியை சேர்ந்த குமார்(39) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து அவர் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதன்படி போலீசார் அவரை தேடிவந்த நிலையில் நேற்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post கோர்ட்டில் ஆஜராகாத வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Manur ,Kumar ,Maniachi, Tuticorin district ,Nellai district ,Dinakaran ,
× RELATED நெல்லை அருகே டிராக்டரில் சரள் மண் கடத்திய டிரைவர் கைது