×

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 946 மருந்தாளுநர், 523 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 946 மருந்தாளுநர்கள், 523 உதவியாளர்கள் மற்றும் 5 தொழில் வழிகாட்டி ஆலோசகர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலகின் கீழ் செயல்படும் இயக்ககங்களில் காலியாக உள்ள 946 மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கான தேவைப் பட்டியல் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்பட்டு, அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தாளுநர்களுக்கு அரசின் அறிவுறுத்தலின்படி உரிய கலந்தாய்வு 13.8.2024 அன்று நடத்தப்பட்டது.

அந்த கலந்தாய்வின் மூலம் அவர்கள் விரும்பிய இடங்கள் தேர்ந்தெடுத்து அதன்மூலம் 946 மருந்தாளுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 3 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுபோல, அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 2018-19 முதல் 2022-23 வரையிலான காலத்திற்கான காலி பணியிட மதிப்பீட்டு அறிவிப்பின்படி தெரிவு செய்யப்பட்ட 523 உதவியாளர் பணியிடத்திற்கு கடந்த ஆக.17ம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதன் மூலம் அவர்கள் விரும்பிய இடங்கள் தேர்ந்தெடுத்து பணிநியமனம் செய்யப்பட்ட 523 உதவியாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 3 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். மேலும், கல்வி, வாழ்க்கைத் தொழில், தனியர் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு ஆலோசனையும், வழிகாட்டுதல்களையும் வழங்குதல், பள்ளி, கல்லூரிகளில் உள்ள தொழில் வழிகாட்டி ஆசிரியர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுதல், வழிகாட்டப்பட வேண்டியவர்களின் நுண்ணறிவு,

உளச்சார்பு, ஈடுபாடு மற்றும் ஆளுமை குணங்கள் ஆகியவற்றை கணிக்கும் உளவியல் தேர்வை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 5 தொழில் வழிகாட்டி ஆலோசகர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக ஒரு ஆலோசகருக்கு பணி நியமன ஆணையையும் முதல்வர் வழங்கினார்.

ஆலோசகர் பணியிடத்திற்கு உளவியல் முதுகலை பட்டம், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் முதுநிலை பட்டயம், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் பட்டயப்படிப்பு படித்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் சுப்ரியா சாகு, குடும்ப நல இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் சித்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 946 மருந்தாளுநர், 523 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Department of Medicine and People's Welfare ,Chief Minister ,M.K.Stalin. ,CHENNAI ,Department of Medicine and Public Welfare ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண்...