×

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் கைது: தடுத்த மகனின் கையை உடைத்தார்

பல்லாவரம்: அனகாபுத்தூர், எம்ஜிஆர் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் மூர்த்தி (43), பெயின்டர். இவருக்கு, அருணா (36) என்ற மனைவியும், ஒரு மகளும், லோகேஷ் (18) என்ற மகனும் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான மூர்த்தி, வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு, ஊர் சுற்றி வந்துள்ளார். இதை, அவரது மனைவி அருணா கண்டித்ததால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மூர்த்தி தனது மனைவி அருணாவிடம் மது குடிப்பதற்காக 200 ரூபாய் கேட்டுள்ளார்.

அவர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர், உருட்டு கட்டையால் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதை பார்த்த மகன் லோகேஷ், தந்தையை தடுத்துள்ளார். இதனால், மகன் லோகேஷையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், லோகேஷ் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், லோகேஷை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், மூர்த்தியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் கைது: தடுத்த மகனின் கையை உடைத்தார் appeared first on Dinakaran.

Tags : PALLAVARAM ,Murthy ,MGR Nagar Main Road, Anagaputhur ,Aruna ,Lokesh ,
× RELATED போலி பத்திரப்பதிவு குறித்து...